Tuesday 23 August 2011

மதுரை பார்முலா சினிமா : சில குறிப்புகள்


by D. Karthikeyan
Published in The Hindu, May 02, 2011, Madurai

In one of the public meetings, Communist Party of India (Marxist) MLA N. Nanmaran, a brilliant orator, said: “In Chennai, people, after knowing that I come from Madurai, in a curious tone but reluctantly asked me, do people in Madurai always carry sickles behind their shirts?” “This is what Tamil cinema's representation of Madurai seems to look,” like he candidly remarked.

Film is an important visual medium which has been an integral part of the modern social and political life of Tamils. Prominent film historian Theodere Baskaran says that “over the seventy-nine years of its existence, Tamil cinema has grown to become the most domineering influence in the cultural and political life in Tamil Nadu.”

However, does all that goes in the name of representation in Tamil cinema is inclusive of all social realities or does that have certain forms of codification that becomes indispensable. And it is here one has to explore how Madurai (Madurai Formula films) or 3M films (Murder, Mayhem, and Madurai) came into being and things related to it on cultural, political, and social milieu get represented in films.

The films based in Madurai are increasingly defined by the glorification of ‘Aruval' (the sickle shaped machete) and a corresponding mythology of a society based on martial pride and honour. Even though some of the films do not explicitly signify caste but the everyday markers provide us with an idea to read it symptomatically.

Sundar Kaali and Ravi Srinivas in an article titled “On Castes and Comedians: The Language of Power in Tamil Cinema” in Ashis Nandy (ed) book ‘ Innocence, Culpability and Indian Popular Cinema' say that Tamil cinema as a secondary modelling system with highly developed and conventionalised codes has over the years evolved particular modes of representing configurations of caste, class, and gender. And it is no surprise that only a few castes and occupational categories are represented and these representations hardly ever correspond to actual social categories.


Sickle culture

Rajan Krishnan, PhD scholar in Film Studies from Columbia University, says that it was Kamal Hassan who brought that sickle bearing genre. He says, “I would like to propose that in recent times, it is a Kamal Hassan film of high authenticity markers called Thevar Magan (1992) —meaning ‘‘Son of Thevar” — that can be said to have inaugurated the era of the south being represented as primarily a sickle bearing space.”

Stalin Rajangam, writer, who has extensively written on the ‘caste component and narrative structures of Tamil films concurs. He says that Thevar Magan was first of its kind with stronger idioms of caste and glorification of caste-based practices.

One of the major observations made by Sundar Kali and Ravi Srinivas relates to the usage of the genealogical praising of Thevar caste in a song that had larger proportions, more than what Kamal claimed, and that was what made it a huge box office success.

Using the patron-client relationship theory, they observe that “the narrative in depicting acts of generosity of the hero as heroic and noble not only mystifies the nature of power but relegates the rest of the village community to positions of either villainy or subservient clientship”

Madurai, which has a strong visual culture, during the release saw a huge 40-feet cut out showing the image of Thevar Magan hero with the extra large sword in his hand. The positioning of the cut out was itself highly significant as it faced the huge statue of Muthuramalinga Thevar. During the guru puja, when objection was raised against the cut out, the sword part was removed and placed behind the structure denoting the concealment of the weapon. However, due to pressure the sword part was restored later, says Sundar Kaali.
Films which came later like Kathal, Gilli, Thiruppachi, Paruthiveeran, Sanda Kozhi, Thimiru, Subramaniapuram, Goripalayam, Madurai Sambavam, Thittakudi, Maathiyosi, Milaga, and the recent hit Aadukalam all have references to Madurai and are full of violence.

Mr. Stalin says that love and valour have long been the basic raw material used by the Tamil cinema. As far as Madurai is concerned the place has a history of festivity and related cultural edifices. This has peeped into the celluloid world and these idioms of valour and honour, which were closely associated with questions of masculinity, found their forms in jallikattu, cockfight, and lifting of stone (Ilavatta kal).

As Madurai is the centre of these cultural practices related to valour, filmmakers had to use cultural practices related to Madurai as part of the narrative. However, the central idea here is that this cultural/ritual space has been for long the space of a particular dominant caste and inevitably this is what gets represented in films.
And even in the context of ‘Pattikada Pattanama' (village vs city, a1972 Sivaji film), Madurai is always chosen as epitomic representation of ‘pattikadu.' Though a pre-modern sphere, but the one which protects the glorious ancient Tamil culture, the city is shown as a space concomitant to all the evils of society.

This encoded social construction was largely done by movie directors who had come from the southern part especially in and around Madurai rather than from the north which is seen as the modern. In fact, most of the filmmakers at the helm of these movies are from Madurai and down south and they bring the small town cultural and caste/class discourse into the narrative centrepiece.

Commenting that Tamil cinemas have failed to project the real conditions, Mr. Stalin says that it always failed to record the Dalit uprisings in the early 1990s which indeed made major cultural interventions and also tried to redefine the spatial norms that were existing in the rural world.

Psychological edge
The films based on Madurai formula at a larger level have given a psychological edge to the dominant castes in relation to the questions of caste. However, earlier films like Madurai Veeran, which made M. G. Ramachandran the matinee idol of Tamil cinema and took him to the subaltern masses, have always had a positive effect.

The folklore legend of a subaltern hero who was hired by the Nayak King to restrain the Kallars has been used widely over generations and when MGR acted in the film it evoked huge response making it a blockbuster in 1956.

“We had films like Thiruvilayadal, Adhi Parasakthi, which were based in Madurai, where Saivite tradition and its conflict with other religious forms become the backdrop. Even the other Madurai based films like Enga Ooru Paatukkaran, Enga Ooru Kavalkaran had tints of caste but showed in a more suppressed form. Karimedu Karuvayan deals with issues of class where a local village man takes on the feudal lords.
In the earlier films, like the Bhakthi film era and later, images of Meenakshi Temple occupied the frame whenever there was a reference to Madurai.

It was during the 80's and later 90's in the neo-nativity genre, the narratives and their reference to the place started changing, says S. Ravikumar, Producer, Educational Multimedia Research Centre, Madurai Kamaraj University. He further says that in most of the films where the protagonist belonged to the Mukkulathor caste, the feudalistic caste markers were kept intact and even if the narrative seems to be affirmative while showing an inter-caste marriage or romantic relationship, it was overtly or subtly showed in a way that either way the protagonist dies or the heroine dies thus reiterating the fact that there was no mixture of blood, Bharathi Kannama, Paruthi Veeran, Kaadhal, Mannvaasanai films exactly did that.

Rajan Krishnan sees the narrative construction of southern Tamil Nadu as a distinct entity submerged in pre-modern violence, caste bigotry and anarchy as another trope. This was epitomised in the Madurai- based romantic social drama Kaadhal.

He argues that the successful employment of the trope of the pre-modern south was preceded by a whole range of films and media representations which contributed to its constitution.

In Kaadhal, he sees a classic expression of the trope that Tamil cinema has tried to constitute for the Tamil psyche, which is torn between the threatening pre-modern assertion of caste and an allegedly “egalitarian,” free market space of modern individuals.

This split was further accentuated in films like Gilli where the images of lorry loads of sickle-bearing, country bomb-throwing men chasing the young couple as they drive towards Chennai lend a mythical dimension to the violent south. Rajan Krishnan says that Tamil cinema has always responded to images created in the popular mind.

He argues that the southern caste conflicts of the nineties are the main reason why the south has come to be portrayed as backward, less civic and given to sickles and primordial violence.

He concludes that it is necessary to seriously engage with the real problems of the south, but should also be wary of self-legitimising discourses and narratives of modernity which offer ‘‘progress'' of capitalist modernity as the only alternatives to savagery and caste bigotry.

The filmmakers here need to be informed about the dangers of stereotyping and the limitations of representative practices of cinema, particularly given the salience and circulation of cinema in Tamil Nadu. The idea of the valour in Tamil cinema is nothing but violence which has been unduly glorified thus transporting the other achievements on the literary, cultural and social to the oblivion.

Monday 22 August 2011

தலித் அடையாளம்: அங்கீகாரத்தின் நிறங்கள்

- ஸ்டாலின் ராஜாங்கம்

தலித் அடையாளத்தின் இன்றைய நிலை குறித்துப் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த விவாதங்களிலிருந்து விலகி, வேறொரு அம்சத்தைப் பற்றியும் பேச வேண்டியுள்ளது. 1990 தொடங்கி தலித் அடையாளம் தலித் அல்லாத தளங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்தும் அவற்றை தலித் அல்லாதார் எதிர்கொண்டுவரும் விதம் குறித்தும் விளங்கிக்கொள்வது மேற்கண்ட விவாதங்களின் ஒரு பகுதியாக அமையும்.

அரசியல் என்னும் சொல்லாடல் வெறுமனே நாடாளுமன்ற அரசியல் நடவடிக்கைகளை மட்டும் குறிப்பதாக இல்லாமல் சமூகவியல், பண்பாட்டு நடவடிக்கைகளையும் குறிக்கும் சொல்லாக மாற்றம் பெற்றது தலித் அடையாள உருவாக்கத்தின் போதுதான். இச்சொல் ஏற்கெனவே அறிவுத் துறையில் புழங்கிவந்திருந்தாலும் விரிவான பொருளில் கையாளப்பட்டது இப்போதுதான். எனவே தலித் அரசியல் என்னும் சொல்லில் இலக்கியம், கலை, அரசியல் போன்ற அம்சங்களும் உள்ளடங்கின. இன்றைக்கு நிறுவனரீதியான ஆய்வுகளிலும் இச்சொல்லாடல் நிலைபெற்றுவிட்டது. இந்நிலையில் தமிழ்ச் சூழலில் நடைபெறும் அரசியல், பண்பாட்டு நடவடிக்கைகள் யாவுமே ஒரு விதத்தில் தலித் எழுச்சியின் தாக்கத்தினையும் எதிர்வினையையும் உட்கொண்டுள்ளன.

தலித் அடையாளத்தின் கீழ் இலக்கியத்தில் தன் வரலாறுகளும் கவிதைகளும் புனைகதைகளும் எழுதப்பட்டன. கலக குணமும் அதிர்ச்சி மனோபாவமும் இதன் அடிப்படை என்று பேசப்பட்டன. புனைவிலக்கியத்தைக் காட்டிலும் தலித் விமர்சனம் சூழலில் கூடுதலான பதற்றத்தைக் கூட்டின. பிரதிகள்மீதான மறுபார்வையும் இலக்கிய அழகியல் குறித்த புதிய கருதுகோள்களும் தலித் விமர்சனத்தினூடாக வெளிப்பட்டன. தலித் இசை, தலித் நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கி தலித் கலை விழாக்கள் பெரிய அளவில் நடத்தப்பட்டன. இவற்றைச் சாத்தியமாக்கிய இந்த அடையாளம் குறித்த எதிர் விமர்சனங்களை 'வலதுசாரிகள் மட்டுமல்ல இடதுசாரி' முகாமினரும் எழுப்பினர். ஆனால் தலித் அடையாளத்தின் நிலைத்த தொடர் போராட்டத்தால் இவர்களது எதிரான போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்நிலைமைக்குப் பிறகு, தலித் அரசியல் இயக்கம், தலித் வரலாறு என்று தனித்துவமான அம்சங்களை நோக்கி தலித் அடையாளம் நகர்ந்தபோது ஏற்பட்ட விளைவுகள் குறித்துத்தான் இன்றைய நிலையில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. உதாரணமாகப் பார்ப்பனரல்லாத இயக்கமாகக் கருதப்படும் திராவிட இயக்கங்கள் மீதும் பெரும்பான்மை சாதியினர் மீதும் முன்வைக்கப்பட்ட தலித் விமர்சனங்கள். சொந்தச் சாதி அடையாளத்தைப் பாதுகாத்துக்கொண்டே தலித்துகளுக்கும் ஆதரவாகப் பேச முடியும் என்ற போக்கினை இவ்விமர்சனங்கள் நிறுத்தின. எனவே இதனை எதிர்கொள்ளும் புதிய உத்திகளும் கண்டறியப்பட்டன. அதனைப் புரிந்துகொள்ள 1990களில் எழுந்த தலித் எழுச்சி குறித்த சூழலையும் நினைவுப்படுத்த வேண்டியுள்ளது.

1990களின் தலித் எழுச்சி அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை ஒட்டியதாகயிருந்தாலும் அச்சூழலில் எழுந்த அறிவுலகம் அம்பேத்கரின் சிந்தனையையும் தலித் மக்களின் அதுவரையிலான போராட்டங்களையும் எந்த அளவிற்கு எடுத்துக்கொண்டது என்பது இன்று கேள்விக்குரியது. ஏனெனில் 1990களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு புதிய சிந்தனைகள், மேலை நாட்டுக் கோட்பாடுகள் வழியமைந்த விளக்கங்கள், விளிம்புநிலை எழுத்துகள் ஆகியவற்றின் மூலமே தலித் சார்ந்த ஆதரவு பெருமளவு அறிவாளிகளிடம் வெளிப்பட்டன. பிராமண எதிர்ப்பு, அதிகாரத்திற்கு எதிரான கலகம் போன்றவற்றைச் சொல்லுவதற்கான அரசியலாக தலித் அடையாளத்தை எடுத்துப் பலரும் விளக்க முன்வந்தனர். நடைமுறையில் தலித்துகள் பிராமணர் அல்லாத சாதியினரால் எதிர்க்கப்பட்டாலும், பிராமணர் அல்லாத சாதியின் அடையாளமாகவே கண்டுகொள்ளப்பட்டனர். இதனை மறுத்தவர்கள் விவாதங்கள் ஏதுமின்றிச் சூழலிலிருந்து அகற்றப்பட்டனர். ஆனால் தலித் மக்களின் கடந்த காலப் போராட்ட அனுபவங்களையும் நிகழ் காலத்தின் சாதி அதிகார முரண்பாடுகளையும் கணக்கில்கொண்டு பார்க்கிறபோது அறிவுலகம் காட்டிய தலித் அடையாளம் மட்டுமல்ல அவர்கள் விரும்பிய பிராமணரல்லாதார் கருத்தியலும் உடைபடுகின்றது. இதனைச் செய்தது 1990களின் கடைசி ஆண்டுகளில் உருவான தனித்துவம் நோக்கிய தலித் விமர்சனம்தான். இவ்வாறு தாங்கள் முன்வைத்த அதுவரையிலான விளக்கங்கள் விடைபெற்ற நிலையில் அறிவுலகத்தில் பலரும் தலித் பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொள்கின்றனர். சாதிய அணுகுமுறையில் குறிப்பான அடையாளச் சிக்கல்கள் வலியுறுத்தப்படுவதற்கு எதிராக ஒடுக்கப்பட்டோர் செலுத்த வேண்டிய விசுவாசம் வலியுறுத்தப்படுகிறது. தலித் என்ற அடையாளத்திற்கு மறைமுகமான எதிர் நிலைப்பாடு இது. தற்காலத்தில் மீண்டும் பேசவந்துள்ள சில அறிவாளிகள் தலித் சார்ந்த உரையாடல்கள் நடந்ததாகவோ அதன் தாக்கங்களையோ காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. மேலும் தலித் விவாதத்தில் இருந்தவர்களைப் புறக்கணிப்பதும் நடக்கிறது. அடுத்ததாக அரசியல் தவிர்த்த தளங்களில் இவ்வடையாளம் எதிர்கொள்ளப்படும் நிலை குறித்தும் பேசலாம்.

தலித் மக்கள் அரசியல் அமைப்புகளைத் தொடங்கிப் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் கட்டமைத்ததற்கு எதிர்நிலையாக ஆதிக்கச் சாதிகள் பலவும் சாதிச் சங்கங்களைத் தொடங்கின. ஏற்கனவே சாதிச் சங்கங்களை வைத்திருந்தோர் மேலும் பலப்படுத்தினர். வேறு சிலர் தலித்துகளுக்கு எதிரான கோரிக்கைகளை எழுப்பிப் போராடவும் செய்தனர். எதிர் ஜனநாயகமாக உருவான இப்போக்கு நேரடியானது. இதற்கான காரணங்கள் வெளிப்படையானவை. ஆனால் பண்பாட்டுத் தளத்தில் உருவாகியுள்ள எதிர்வினைகள் அத்துணை வெளிப்படையானவையல்ல. மாறாக நுட்பமானவையாகும். இலக்கியம், ஊடகம், கலை சார்ந்து இவை வெளிப்படுகின்றன.

தலித் இலக்கியம் என்பதைச் சாதி இலக்கியமாகக் கருதித் தத்தம் சாதி இலக்கியங்களுக்கான 'நியாயங்களை' உருவாக்கி இலக்கியம் படைக்கும் போக்கு உருவானது. சுயம், வட்டாரம் சார்ந்த சொல்லாடல்கள் இதற்குப் பயன்பட்டன. முன்னெப்போதையும்விடச் சாதியடையாளம் கொண்ட படைப்புகள் பெருகின. தொடக்கத்தில் புதுச்சேரியிலும் தொடர்ந்து மதுரையிலும் தலித் கலை விழாக்கள் நடத்தப்பட்டன. இவை அனைத்தின் பார்வையாளர்களாகவும் பங்கேற்பாளர்களாகவும் இருந்த தலித் அல்லாதோர் இதே போன்று தங்கள் அடையாளங்களையும் தேடத் தொடங்கினர். கலை விழாக்களில் கலந்துகொண்ட வேறுசில படைப்பாளிகள் தலித்துகளின் அடையாளங்களையும் தம் சொந்த அடையாளங்களையும் சேர்த்தே தங்கள் படைப்புகளில் சித்தரித்தனர். தங்கர்பச்சானின் 'சொல்ல மறந்த கதை', 'தென்றல்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' போன்ற திரைப் பிரதிகள் இதற்கு உதாரணம். இதே போன்று தங்கள் அடையாளங்களுக்கு அறிவுலக அங்கீகாரங்களை உருவாக்கும் பின்னணியில் பத்திரிகைகளையும் பதிப்பகங்களையும் (காவ்யா) ஏற்படுத்திக்கொண்டனர்.. தலித் தொடர்பான நூல்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த இப்பத்திரிகைகளும் இப்பதிப்பகங்களும் சொந்தச் சாதிப் பிரதிகளையும் உருவாக்கத் தொடங்கியுள்ளன. தலித் வரலாற்று அடையாளம், சிந்தனை வரலாறு போன்றவை மீட்கப்பட்ட சூழலில் தங்கள் அடையாளம் பூண்டு வரலாற்றினைக் கட்டுவதற்கும் தலித் ஆளுமைகளோடு ஒப்பிட்டு, பேதம் பாராட்டுவதற்கும் இவை முற்படுகின்றன. ஆனால் இவற்றில் எதையும் முன்பைப் போல் சாதியடையாளத்தைச் சொல்லி விமர்சிக்க முடியாது. அவ்வாறு சொல்ல முடியாத நிலைமையையும் வாய்ப்பையும் இவர்கள் சேர்த்தே உருவாக்கினர். அதாவது இவர்கள் தலித் அடையாளங்களை மறுப்பதில்லை. மாறாக அதையும் சேர்த்தே பதிவுசெய்தனர். இந்த அங்கீகாரத்தை வழங்கிக்கொள்ளும் அதே வேளையில் தம் சொந்தச் சாதி அடையாளங்களையும் மீட்டெடுத்துப் பேசுகின்றனர். இப்போக்கு ஒரு ஜனநாயக அம்சமாகத் தோற்றம் தரலாம். ஆனால் இச்சூழலை அவ்வாறு விளக்க முடியாது என்பதே உண்மை. ஒடுக்கிறவருக்கும் ஒடுக்கப்படுவோர்க்கும் ஒரேவித நியாயத்தைத் தர இந்நிலை முயல்கிறது. தலித் சாதிகளோடு தங்கள் சொந்தச் சாதி 'பாதிப்பையும்' அடையாள மீட்பையும் உருவாக்கும் ஆதிக்க வகுப்பின் இப்போக்கிற்குச் சுய அடையாள அரசியல் மட்டுமல்லாது தமிழகத்தின் புகழ்பெற்ற சமூக நீதிச் சொல்லாடலான பிராமணர் அல்லாதார் என்னும் அடையாளமும் பயன்படுகிறது. வல்லினம் இதழில் (2008 ஜூலை) பழமலை எழுதிய "பங்காளிகள், பகையாளிகளாய்" என்ற கவிதையையும் ஒரு சான்றாகச் சொல்லலாம். இதனால்தான் இச்சொல்லாடல் மீது விமர்சனம் வைக்கப்படும்போது பதற்றம் ஏற்படுகிறது.

தமிழ் சினிமாவின் வட்டாரச் சித்தரிப்புகளிலும் இதன் தாக்கமுண்டு. தற்காலத்தில் வெளியான சில படங்கள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்டிருக்குமானால் நிச்சயம் வேறு மாதிரியாகவே இருந்திருக்கும். இன்றைக்குப் பாத்திரச் சித்தரிப்பிலும் இசையிலும் பாடல்களிலும் தலித் அடையாள அரசியலின் தாக்கமிருக்கிறது. 'பருத்தி வீரன்', 'சுப்ரமணியபுரம்' போன்ற படங்களின் கிராமியப் பாடல்களில் ஏதோவொரு விதத்தில் தலித் கலை விழாக்களின் தாக்கமிருக்கின்றது. அதேபோல அமீர், பாலாஜி சக்திவேல், பாலா போன்றோரின் படங்களில் தனித்துப் பேச வாய்ப்பு வந்தால் தலித் பாத்திரங்களைக் காட்டுவதும் முரண்படும் சாதி சார்ந்த குழுக்களைச் சித்தரித்தால் தலித் பாத்திரங்களின் அடையாளங்களை மட்டும் பொதுவாக்கிவிடுவதும் நடக்கிறது. இவ்விடத்தில் ஆவணப் படங்களைக் குறித்தும் பேச வேண்டியுள்ளது. தலித் பிரச்சினைகள் ஆவணப் படங்களாக எடுக்கப்பட்ட சூழல் மாறிச் சொந்தச் சாதி அடையாளங்களை விடுதலைப் போராட்டம், தமிழன் போன்ற பொது அடையாளங்களின் பெயரால் மறு உற்பத்தி செய்துகொள்ளும் சூழல் உருவாகியிருக்கிறது. கி. தீனதயாள பாண்டியனின் 'ரேகை', 'காலம்' போன்ற படங்கள் இதற்கு உதாரணங்கள்.

மேலே பேசப்பட்ட இப்போக்குகளுக்குப் பின்னால் தலித் அடையாள அரசியலின் தாக்கம் மட்டுமல்ல, அதனை எதிர்கொள்ளும் நோக்கமும் இருக்கிறது. நேரடியான சாதியடையாளம் இல்லாதவை போன்ற தோற்றம் தரும் இவற்றின் பின்னால் இருப்பவை சாதி நோக்கம் மட்டுமே என்பது நம் வாதம். தலித் அடையாளத்தை அங்கீகரிப்பதன் மூலம் சாதி குறித்து தலித் அடையாளம் எழுப்பிய கேள்விகளிலிருந்து தப்பித்துக்கொள்வதும் மறுவகையில் சாதி அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்வதுமான அனுகூலங்கள் கிடைக்கின்றன. ஏனெனில் ஜனநாயக அடையாளம் பூண்ட இந்த வகையினர் நெருக்கடியான சூழ்நிலையின்போதோ சாதி முரண்பாடுகள் அடிப்படையில் மோதல் நடக்கும்போதோ தங்கள் சொந்தச் சாதியினர் பக்கமே நிற்பார்கள். அதோடு தலித் அடையாளமும் வெறுமனே சாதி சார்ந்த ஒன்று என்னும் தோற்றத்தையும் இச்சூழல் உருவாக்கிவிடுகிறது.

இவையெல்லாவற்றையும்விடப் பிராமணரல்லாத சாதியினர் தங்களது அதிகாரத்தைப் புதியதொரு வகையில் தக்கவைத்துக்கொள்ளும் உத்தியையும் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். உதாரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம். சொந்தச் சாதிப் படைப்பாளிகளை மட்டுமே பொறுப்பாளர்களாகக் கொண்டு தொடங்கப்பட்ட அதன் தொடக்க விழாவில் பல்வேறு சமூகச் செயல்பாட்டாளர்களையும் சிந்தனையாளர்களையும் பங்கேற்கவைத்தனர். சாதியடையாளத்திற்கு ஜனநாயக அங்கீகாரம் இவ்வாறு கட்டப்பட்டது. அதற்கேற்றாற்போல் அதில் கலந்துகொண்டவர்களில் யாரும் பெரிய அளவில் அதன் சாதி நோக்கம் குறித்துக் கேள்வி எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தளத்தில் தலித் பிரதிநிதிகளையும் அழைக்கின்றனர். இதற்காக நிலவும் அரசியல் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்கின்றனர். தலித் அடையாளத்திற்குத் தங்கள் தரப்பு வழங்கிய 'அங்கீகாரத்திற்கு'ப் பதிலியாக ஜனநாயக முகத்திற்காக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இச்சூழலை 1910, 1920 ஆகிய காலகட்டங்களோடு ஒப்பிட்டும் புரிந்துகொள்ளலாம். அதாவது பிராமணரல்லாதார் இயக்கம், நீதிக்கட்சி போன்ற அமைப்புகள் தங்கள் மேடைகளில் தலித் பிரதிநிதிகளைப் பங்கேற்கச்செய்வதன் மூலம் தங்கள் தரப்பைப் பாதுகாத்துக்கொண்டனர். ஆனால் அன்று முதல் இன்றுவரையிலும் இந்நடவடிக்கைகளின் நோக்கம் குறித்த விழிப்புணர்வு தலித் பிரதிநிதிகளுக்கு இருந்தேவருகிறது. தலித் அல்லாத ஆதிக்கப் பிரிவினரின் இப்போக்கு பண்பாட்டுத் தளங்களுக்கு மட்டுமல்லாது அரசியல் தளங்களுக்கும் பொருந்தும்.

தலித் அடையாள அரசியலின் எதிர்வினைகளை இவ்வாறான அரசியல் பின்புலத்தில் வைத்து விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் தலித் அடையாள அரசியல் சார்ந்து ஏற்பட்டுள்ள ஒருவித 'தேக்கத்திற்கு' தலித்துகளை மட்டுமே காரணமாக்கு வதைத் தவிர்க்க முடியும். தலித் அடையாளம் தாங்கள் வரையறுத்த எல்லையின் அடிப்படையில் இருந்தால் மட்டுமே அதை ஆதரிப்பது என்ற நிலைதான் இன்று தலித் மீதான அக்கறையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இது ஒருவகையில் காந்திய அணுகுமுறையாகும். ஆனால் தலித்துகளின் தனித்துவத்தை அங்கீகரித்த தலித் ஆதரவே இங்கு அவசியப்படுகிறது. தமிழ்ப் பண்பாட்டு செயற்பாட்டாளர்கள் காந்திய அணுகுமுறையோடுதான் இப்பிரச்சினையைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதையே இந்த எதிர்வினைகள் சொல்கின்றன.

பரளிப்புதூர் தலித்துகள் மீது தாக்குதல் - உண்மை அறியும் குழு அறிக்கை

திண்டுக்கல்  மாவட்டம் நத்தம் வட்டம் பரளிப்புதூர் கிராமத்தில்  2011  பிப்ரவரி 13  இரவு தலித்துகள் மீது முத்தரையர் வகுப்பினர் நடத்திய தாக்குதல் குறித்து உண்மை அறியும் குழு அறிக்கை


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் பரளிப்புதூர்  என்னும் கிராமம் மதுரை மாவட்டம் எல்லையை ஒட்டி அமைந்து இருக்கும் திண்டுக்கல் மாவட்ட கிராமம். இங்கு  தலித் பிரிவினைச் சேர்ந்த பறையர்கள் 84 வீடுகளும் முத்தரையர் சமூகத்தினர் 600  வீடுகளும் உள்ளனர். இங்கு முத்தரையர் சமுதத்தினரே பெரும்பான்மை ஆதிக்க வகுப்பினர்.

இங்கு சாதி தொடர்பான பெரும்மோதல்களும், வெளிப்படையான  பிரச்சனைகளும் இதுவரையிலும் நடந்திராத நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சிறு சிறு புகைச்சல்கள் எழுந்து அடங்கி வந்துள்ளன. இக்கிராமம்  மதுரையிலிருந்து நத்தம் செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலைவழியாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளே அமைந்துள்ளது. அவ்வாறு செல்லும் சாலையில் முதலில் தலித் குடியிருப்பும்,  அதிலிருந்து பிரிந்து செல்லும் சாலை வழியாக அரைகிலோ மீட்டர் தூரத்தில் முத்தரையர் வசிக்கும்  குடியிருப்பும் அடுத்ததாக அமைந்துள்ளது.

இங்கு கடந்த 2011  பிப்ரவரி 6ம் நாள் தலித் பகுதியில் நடந்த திருமண நிகழ்சிக்காக தலித் மக்கள் சார்ந்திருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கொடியும், தி மு க கொடியும் அம்மக்கள் வசிக்கும் பகுதியிலேயே அமைந்துள்ள காலனி நீர் தேக்கத்தொட்டி மீது அம்மக்களால் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட இக்கொடிகள் நீர்த்தேக்கத் தொட்டி மீதே மூன்று நாட்கள் வரையிலும் இருந்துள்ளது. இந்நிலையில் முத்தரையர் சிங்கச்சின்னம் பொறித்த முத்தரையர் சாதிச்சங்க கொடியினை கொணர்ந்து தலித் மக்கள் பகுதியிலிருக்கும் நீர்த்தேக்க தொட்டி மீது கட்டினர். ஊரின் முகப்பிலேயே தலித் தரப்பு அடையாளம் ஒன்று தான் எல்லோரையும் வரவேற்பது போல் அமைந்திருக்கிறது என்ற சாதிசார்ந்த பொறாமையினால் அது கட்டப்பட்டது என்பதே தலித்மக்களின் குற்றச்சாட்டு. சாதி சமுகத்தின் அத்தகைய உளவியல் புரிந்துக்கொள்ளக்கூடியதே. இச்சிக்கலான நிலையை புரிந்து கொண்ட தலித் பகுதி அடங்கியுள்ள பகுதியின் ஒரேயொரு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பஞ்சு என்பவர் கிராம பஞ்சாயத்து தலைவரான முத்தரையர் சமூகத்தினை சேர்ந்த நல்லியப்பன் என்பவரிடம் நிலைமையை சொன்னார்.

"உங்கள் கொடியை கழற்றிவிடுங்கள், எங்கள் சமூகத்தினரிடம் சொல்லி எங்கள் கொடியை அவிழ்க்க கூறுகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிடுகிறார். 

இதற்கு மறுநாள் மாலை பஞ்சு தலித்தரப்பு கொடியை அவிழ்க்க சென்ற போது முத்தரையர் சாதிசங்கக்கொடி மீது செருப்பு ஒன்று கட்டப்பட்டிருந்தது. இதன் விளைவை உணர்ந்த பஞ்சு தலித் தரப்பு கொடியோடு அச்செருப்பையும் அகற்ற முயற்சித்தார். அப்போது அங்கு வந்த முத்தரையர் தரப்பினர் செருப்பை அகற்றக்கூடாது என்று தடுத்தனர். அதற்கு முன்பே பரளிப்புதூரை சுற்றியிருந்த முத்தரையர் கிராமங்களுக்கு சாதிசங்கக்கொடி அவமதிக்கப்பட்டதாக தகவல்களை அனுப்பியிருந்தனர். சுற்றுவட்டாரத்திலிருந்த 15 கிராமங்களிலிருந்த முத்தரையர்கள்  15 க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் பரளிப்புதூரை இணைக்கும் நத்தம் நெடுஞ்சாலைகளில் வந்திறங்கினர். அதனாலேயே அந்த செருப்பை அகற்றக் கூடாது என்று முத்தரையர் தரப்பு கூறியிருந்ததாக தெரிகிறது.

தலித்துகள் செருப்பைகட்டி அவமதித்தனர் என்று குற்றம் சாட்டி முத்தரையர் மறியலில் ஈடுபட "எங்களின் தனித்துவ அடையாளத்தை முடக்குவதற்ககான தருணத்தை உருவாக்க முத்தரையர்களே செய்து கொண்ட ஏற்பாடு அது" என்று அதனை தலித் தரப்பு மறுக்கிறது.

நத்தம் நெடுஞ்சாலையில் இரவு 7 மணியளவில் சாலை  மறியலில் ஈடுபட்ட முத்தரையர்கள் சுமார் 300 பேரோடு 15 வாகனங்களில் பரளிப்புதூர் தலித் குடியிருப்பை நோக்கி 11 மணியளவில் வந்தனர். அப்போது அங்கு பத்துக்கும் குறைந்த காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்புக்கு இருந்தனர். அது  தாங்கள் சற்றும் எதிர்ப்பாராத ஒன்று என்று தலித் மக்கள் கூறுகின்றனர். 

பெட்ரோல்,கம்பு, கடப்பாரை, ஆகிய ஆயுதங்களோடு குடியிருப்புக்குள் 300  பேர்  பெரும் ஆரவாரத்தோடு நுழைந்து வீடுகளை தாக்கினர். ஓட்டு வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டன, ஓட்டு வீடுகளின் முன்புறமாகவும் பின்புறமாகவும் வேயப்படிருந்த கீற்று கொட்டகைகள் கொளுத்தப்பட்டன. வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்பைக்குகளும், சைக்கிள்களும் கொளுத்தப்பட்டன. வீடுதோறும்  பாத்திரங்கள் டிவி பீரோ ஆகியவை உடைக்கப்பட்டன. வைக்கோல் படப்பு  கொழுத்தப்பட்டது, கான்கீரிட் வீடுகள் கடப்பாரைகளைக் கொண்டு சேதப்படுத்தப்பட்டன. மெத்தை வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களும் கதவுகளும் உடைக்கப்பட்டன. அங்கிருந்து விடுதலைச்சிறுத்தைகள்  கட்சியின் கொடிகம்பம் இரண்டாக உடைக்கப்பட்டு சாய்க்கப்பட்டது. திருமாவளவன் படம் வரையைப்பட்டிருந்த முகாம் பலகை கொளுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய அரைமணிநேரம் வரை இத்தாக்குதல் நீடித்தது. ஆண்கள் எல்லோரும் இரவு நேரமென்றும் பாராமல் ஊரைவிட்டு வெளியேறும் நிலை உருவானது. பெண்கள் மட்டுமே இருந்தனர். குழந்தைகளின் ஆடைகளை விலக்கி ஆணா பெண்ணா என்று பார்த்து விட்டு சென்றுள்ளனர். தலித் பெண்களுக்கு முன்பு அக்கும்பலில்  இருந்த ஆண்கள் நிர்வாணமாக நடந்து அப்பெண்களை ஏசியுள்ளனர்.

தாக்குதல் நடந்து இரண்டு நாளாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படவில்லை. சேதங்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை. கலெக்டர் சம்பவ இடத்திற்கு வரவில்லை. காவல்துறையின் நடவடிக்கை திருப்திதரக்கூடியதாக இல்லை.  உரிய பிரிவுகளில்  வழக்குபதிவு செய்யப்படவில்லை. SC/ST (ACT)1989 - ஆம் சட்டத்தின்படி வழக்கு பதியப்படவில்லை.
  
தாக்குதலில் காயம்பட்ட தலித் சமூகத்தினைச் சேர்ந்த நைனார் என்பவரையும்  அய்யாவு என்பவரையும் முத்தரையர் கொடியை அவமதித்த வழக்கில் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இச்சம்பவம் இப்போதுவரையிலும் பரளிப்புதூர் தலித்மக்களுக்கு தெரியாது. இது நியாயமற்ற கைது.

உண்மை அறியும் குழு நேரடியாக பார்வையிட்டதன் அடிப்படையில் சேதங்களின் அளவானது. தலித் காலனியில் 98 சதவிகித வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடமும்,கோயிலும் மட்டுமே விடப்பட்டுள்ளன. தாக்கப்பட்டுள்ள வீடுகளில் ஓடுகள் சேதம் என்ற அளவில் 25 சதவிகிதமும், பொருட்கள் சேதம் தீவைப்பு எனும்- அளவில் 75 சதவிகித வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 15 க்கும் மேற்பட்ட மோட்டார்பைக்குகள், 10-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள், வைக்கோல்படப்பு,பாத்திரங்கள்,டிவிகள் ஆகியவை சேதப்பட்டுள்ளன. குழந்தை பிறந்து 4 நாட்களே ஆகி வீட்டுக்குள் இருந்த அழகுமீனா என்ற பெண்ணும் கூட வீட்டிலிருந்து ஓட முடியாமல் ஓடியிருக்கிறார்.கர்ப்பம் இருந்த மாரிதேவி என்ற பெண்ணுக்கு அபார்ஷன் ஆகியுள்ளது. பெண்கள் அச்சத்தினால் வீடு ஒன்றில் மறைந்த பின்பும் கடப்பாறையை கொண்டு வீட்டை இடித்து மிரட்டியுள்ளனர். பழநி என்பவரின் டீக்கடையோடு கூடிய சிறு மளிகைகடையும் தீவைக்கப்பட்டுள்ளது. இரண்டு கோழிகள், ஒரு டஜன் ஆடுகள் எரிக்கப்பட்டன. காயம் என்றளவில் நைனா என்பவரும் செல்லம்மாள் என்பவரும் சிறுகாயம் அடைந்துள்ளனர். அங்கிருந்த மின்மாற்றியை (ட்ரான்ஸ்பர்ம்) தாக்கி மின்சாரத்தை நிறுத்திவிட்டே தாக்குதலை தொடங்கியுள்ளனர்.தாக்குதலை முடித்துவிட்டு நத்தம் சென்ற அக்கும்பல் செல்லும் சாலையிலிருந்த தலித் குடியிருப்புகளை எல்லாம் தாக்கிக்கொண்டே சென்றுள்ளனர். குறிப்பாக வத்திப்பட்டி என்றும் கிராமத்திலிருந்த திருமாவளவன் படம் போட்ட பேனரும், மூன்று குடிசைகளும் தாக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடந்த பரளிபுதுரை  நோக்கி போலீசார் திசை திரும்பியிருந்த நேரத்தில் நேராக நத்தம் சென்ற கும்பல் இரவு 1 மணியளவில் அங்கிருந்த ரவுண்டானாவில் முத்தரையர் பெரும்பிடுகு  சிலையை சட்டவிரோதமாக  நிறுவ முயற்சித்தது. போலீசார் தடுத்து கும்பலை விரட்டிய காரணத்தால் அம்முயற்சி நின்று போனது.

இப்பிரச்சனை தொடர்பாக பரளிபுதூர் தலித் குடியிருப்பினை பார்வையிட்டு ஊரில் இருந்த பெண்கள், ஊரை விட்டு வெளியேறியிருந்த ஆண்களை சந்தித்த நம் உண்மையறியும் குழு முத்தரையர் குடியிருப்பில் யாரும் இல்லாததால் ஊரில் கடைக்கோடியிருந்த  சில வீடுகளின் சில பெண்களை மட்டுமே பார்க்க முடிந்தது. ஊராட்சி மன்றத்தலைவரும் இல்லாததால் அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட பொது அதுவும் அணைத்து வைக்கப்பட்டுயிருந்தது. இது தவிர காவல்துறை டி எஸ் பி ராஜராமனை சந்தித்து தகவல் திரட்ட முடிந்தது.
மேற்கண்ட யாவரின் வாதங்களாவன.

 தலித்மக்கள்:-

எங்களுக்குள் பெரிய மோதல்கள் இருந்தது இல்லை. எங்களின் இரண்டு பகுதியிலும் தி.மு.க கட்சி சமமாக காலூன்றி இருந்தது. அண்மைக்காலமாக தலித் இளைஞர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின்   முகாமை  தொடங்கி கொடிகட்டுதல், திருமாவளவன் படம் போட்ட சுவரொட்டி ஒட்டுதல், பாடல்களை ஒலிப்பரப்புதல் என்று செயற்பட்டு வருகின்றனர். இது தவிர வெளிப்படையான அரசியில் முரண்கள் இல்லை. ஆனால் கடந்த கிராமபஞ்சயத்து தேர்தலின் பொது தொடர்ந்து பொது பஞ்சயத்தாக இருந்து வரும் பரளிபுதுரை ரீசெர்வ் பஞ்சயத்தாக மாற்றவேண்டுமென்று தலித் தரப்பில் சிறு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மற்றபடி 6 மாதத்திற்கொரு முறை சிறு சிறு மோதல்கள் எழுந்து உடனே சரியாகிவிடும் நிலைமையே இருந்து வந்தது.

தாக்குதல் நன்கு  திட்டமிடப்பட்டது என்று தலித் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாக்குதலுக்கு காரணமான கொடிகட்டுதல் சார்ந்த பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்தே முத்தரையர்கள் பிரச்னை செய்து வந்தனர்.  எங்கள் பகுதியிலிருக்கும் தண்ணீர் தொட்டி மீது கொடியை கட்டும் போதே முத்தரையர் பகுதியிலிருந்து முன்னாள் வார்டு உறுப்பினர் ஆர். கருப்பணன், அபர்ணா-வேன் உரிமையாளர் பாலமுருகன், கண்ணன், கணேசன், சின்னழகு, தேங்காய்வெட்டு - முருகன் ஆகியோர் கட்டக்கூடாது என்று தடுத்தனர். நீங்கள்  கட்டினால் நாங்களும் கட்டுவோம் என்றனர். ஆதே போல கட்டவும் செய்தனர். எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாக்கு ஒன்றை  தேடுவதற்காக செருப்பையும் அவர்களே கட்டியிருக்க வேண்டும்.

அவ்வாறு கட்டிவிட்டு மறியல் செய்தனர். மறியல் செய்து விட்டு பரளிபுதூர் காலனிக்கு முன்பாகவே நெடுஞ்சாலையை ஒட்டியிருக்கும் மற்றொரு தலித் குடியிருப்பான அம்பேத்கர் நகரில் 3  வீடுகளை தாக்கினர். அடுத்துதான் பரளிபுதூர் காலனிக்கு ஒரு கும்பல்வந்து பெரும்சத்தம் போட்டு கொண்டிருந்தனர். இது ஒரு வழக்கமான சத்தம் என்றே  நாங்கள் நினைத்தோம். ஆனால் அங்கிருந்த மாமரத்தில் நின்றுகொண்டு நெடுஞ்சலையிருந்த மற்றவர்களை போன்போட்டு  அழைத்தனர். அப்போது சில போலிஸ்காரர்கள் இருந்தனர். சிறிது நேரத்தில் மின்சாரம் நின்றது. பிறகுதான் பெரும்கும்பல் தாக்குதலில் இறங்கியது.

15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த முத்துரையர்கள் வலசை  , வெள்ளியன்குன்றம் புதூர், கடவூர், புதுகோட்டை, விளாம்பட்டி,புதூர், லிங்கவாடி, பெருமாபட்டி, ஆணையூர், ஆகிய ஊர்களை சேர்ந்தவர்களாவர்.

எங்கள்  மீது தாக்குதல் நடத்தி காவல்துறையினரை திசை திருப்பிவிட்டு நத்தம்  ரவுண்டானாவில் முத்துரையர் சிலை வைப்பதே அவர்களின் நோக்கம் என்பது தலித் மக்களில் ஒருதரப்பார் குற்றச்சாட்டு.

இத்தாக்குதலில் உள்ளூர்மக்கள் மட்டுமல்லாது முத்தரையர் சமூக பிரமுகர்களும் பங்கொண்டு உதவினர் என்பது தலித் மக்களின் கூற்று. வத்திப்பட்டி அம்சா - ஸ்டியோ உரிமையாளர் அம்சராசாவின் சுமோ, வத்திப்பட்டி - அழகு என்ற குட்டையன் தந்த பெட்ரோல், தேமுதிக  ஒன்றிய பொறுப்பாளர் பாபு, சரந்தாங்கி ஊராட்சித்தலைவர் முத்தையன், காசம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் ரமேஷ் ஆகியோர் பங்கு கொண்டனர்.

அரசாங்கத்தின் உதவி இல்லை. எங்கள் உறவினர்களும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் தந்த அரிசியில் சமைத்து வருகிறோம். அதிகாரிகளில் தவிர கலக்டர் உள்ளிட்ட யாரும் வரவில்லை. அரசியல் அமைப்புகளும் வரவில்லை.

முத்தரையர் தரப்பு:-

நாங்கள் தாயாய் பிள்ளையாய் தான் பழகினோம். எங்கள் சாதி பெண்கள் இருவரை  தலித் தரப்பு திருமணமே கூட செய்திருக்கிறது. இப்போது வெளியூர்காரர்கள்  தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்திருக்கிறார்கள். (ஊரில் ஒரு ஆணை கூட பார்க்க முடியாத நிலையில் இரு பெண்கள் மட்டும் தயக்கத்துடன் பதிவு செய்தது.) 

காவல்துறை:-

டி எஸ் பி அவர்களை குழு சந்தித்து, எடுத்த நடவடிக்கை குறித்து கேட்ட போது இரு தரப்பும் நடந்துகொண்டது சகிக்க முடியாதது என்றும் இரு தரப்பின் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

தாக்குதல் நடந்தது தெள்ள தெளிவாக இருக்கும் போது ஏன் வெறும் சாதியை சொல்லி திட்டிய பிரிவில் வழக்கு தொடுத்துள்ளீர்கள் என கேட்ட போது, அவசரத்தில் நடந்ததாகவும் சார்ஜ் சீட்டில் சரி செய்வதாகவும் சொன்னார். எப் ஐ ஆர் இல் திருத்தலாமே, என சொன்னதற்கு இனி சாத்தியமில்லை என்றார். அவரை பொறுத்தவரை இரு தரப்பும் தவறு என்ற மனநிலையில் மொத்த பிரச்சனையையும்  கருதி நடவடிக்கை எடுத்துள்ளார். 

உண்மையறியும் குழுவின் பார்வை:-

சமூகத்தளத்தில் தனித்தனி சாதிகளின் அடையாள உருவாக்கம் வலுப்பெற்று வரும் சமகாலச் சூழலில் முத்தரையர்களும் அத்தகு முயற்சிகளில் இறங்கி முத்தரையர் பெரும்பிடுகு சிலை   போன்றவற்றை சாதித்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் தீண்டாத சாதியாக அடங்கி வாழ்ந்த சமூகத்தினரின் அரசியல் எழுச்சி முத்தரையர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை அடக்கிவைக்கவும் , தங்கள் சாதி அடையாளத்தை உறுதியாக்கிக்கொள்ளவும் முத்தரையர்களை உந்தியது. இது நாள் வரையில் சிறு சிறு கோபங்களாக இருந்த இப்போக்கு இப்போது இத்தாக்குதல் மூலம் முழுவடிவம்  பெற்றுளளது. இத்தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்புதாம் பரளிப்புதூருக்கு அருகிலுள்ள வத்திப்பட்டி என்னும் ஊரில் முத்தரையர் பெண்ணை திருமணம் செய்து கொண்ட தலித் ஒருவர் ஊரை விட்டு வெளியேறி உள்ளார்.  இந்த ஊரைச் சேர்ந்தவர்களும் இத்தாக்குதலில் மும்முரமாய்  இருந்துள்ளனர்.  பரளிப்புதூரில் விடுதலைச்சிறுத்தைகள் கொடிக்கம்பமும், பெயர்பலகையும் தாக்கப்பட்டமை தலித்துகளின் அரசியல் அடையாளம் மீதான கோபத்தையே காட்டுகிறது.

தலித் குடியிருப்பு மீதான இத்தாக்குதல் மற்றுமொரு கொடியங்குளம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அமைந்துள்ளது. மேலும் இது போன்ற தாக்குதல் தொடர்ந்து இருந்து வருவதோடு, மிகச் சாதரணமாகி சமூக ஒப்புதலை பெற்றும் விட்டன. தாக்குதல் நடந்த பின்னால் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரச்சனையை முன்னெடுத்துள்ளது. அழுத்தம் தரக்கூடிய அளவிற்கு தலித் கட்சிகளும் முன் வரவில்லை.  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளரும்  சம்பவம் நடந்து 3 நாள் ஆகியும் வராத நிலையில்   எந்த  சலுகையும் வாங்க மாட்டோம் என்று தலித் பெண்கள் எதிர்த்த போது விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் , அரசுடன் மோதல் போக்கு வேண்டாம் என்று வலியுருத்திதாக இளைஞர்கள் பதிவு செய்தனர்.

பரளிபுதுரில் முத்துரையர்களே பெரும்பான்மை. தலித்துகள் சிறுபான்மையினர். பாரளிபுதூரை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பான்மையும் முத்தரையர் கிராமங்களே. குறிப்பாக பரளிபுதூர் பஞ்சாயத்து என்பதே புதூர், பரளி, எம் ஜி ஆர் நகர், அழகாபுரி ,தேத்தாம்பட்டி, வேம்பரளி,பொடுகம்பட்டி,அம்பேத்கர் நகர், ஆகிய ஏழு கிராமங்களை உள்ளடக்கியதேயாகும். அங்கு ஊராட்சிதலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோர் முத்தரையர்களே. மொத்தமுள்ள 9  வார்டுகளில் ஓரயொரு வார்டு மட்டுமே தலித் உறுப்பினரைகொண்டது.இங்கு பெரும் மோதல்கள் நடைபெறவில்லை என்பது உண்மையே.முத்தரையர்கள் மட்டுமே நிலம் உள்ளவர்கள். ஆனால் அவை பெரும் நிலக்கிலாரிய பண்பு கொண்டவை அல்ல. தலித்துகளில் பலரும் அவர்களிடம் வேலை செய்து வருபவர்களே . ஆனால் பல்வேறு மாற்றங்களின் வழியாக தலித்துகள் விவசாயக் கூலி வேலைக்கு செல்வது குறைந்து வருகிறது. தலித்துகளில் படிப்போர் எண்ணிக்கையும் முத்தரையர்களை  ஒப்பிடும் போது   கூடி வருகிறது.

கடந்த  சில வருடங்களில் பரளிப்புதூர் தலித்துகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாமை  தொடங்கியுள்ளனர். அது முதல் பொதுவான விழாக்கள் தொடங்கி குடும்ப விழாக்கள் வரையிலும் அக்கட்சி அடையாளம் தாங்கியே தங்களை வெளிப்படுத்தி வந்துள்ளனர். திருமாவளவனின் படம் தாங்கிய சுவரொட்டியும் பேச்சு அடங்கிய ஒலிநாடா ஆகியனவும் ஒலிபரப்பப்படுவதுண்டு.

20 ஆண்டுகளுக்கு முன் இதே ஊரை சேர்ந்த முத்தரையர் சாதி பெண்ணை தலித் ஒருவர் திருமணம் செய்திருந்தாலும் அவரின் குடும்பத்தோடு உறவு இல்லையே தவிர தாக்குதல் ஏதும் முத்தரையர் தரப்பில் நடத்தப்பட வில்லை. அதே போல மற்றொரு திருமணமும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தலித்துகளின்  தனித்த அரசியல் முயற்சிகள்  முத்தரையர்களை தொந்தரவு செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.கடந்த பஞ்சாயத்து தேர்தலின் போதுதான் அக்கிரமத்தை ரிசெர்வ் பஞ்சயதாக மாற்ற வேண்டும் என்ற பேச்சும் தலித்துகள் மத்தியில் எழுந்து அடங்கியிருக்கிறது. இக்கிராமம் மட்டுமல்லாது சுற்று வட்டார கிராமங்கள் தோறும் தலித்துகளிடையே  தனித்த அரசியல் முயற்சிகள் எழுந்துள்ளன.

பரிந்துரைகள்: 

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு:

1 . இரண்டு தரப்பும் தவறுகள் செய்துள்ளதாக வழக்கினை பதிவு செய்வது பாதிக்கப்பட்ட தரப்பை மீண்டும் தண்டிப்பதாகவும் ஆதிக்க சாதியினர் மீதான குற்றத்தை காப்பாற்றுவதாகவும் இருக்கும். உண்மையை திசை திருப்பும் அணுகுமுறையாகவும் இருக்கும்.

2 .   தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் 3(10)(x) என்ற பிரிவின் கீழ் சாதியை சொல்லி திட்டியதாக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.எனவே பின்வரும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

 sc/st வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்

3(1) (ii) - காயம் ஏற்படுத்தல் 
3(1) (iii) - ஆடைகளை களைதல்
3(1) (ix) - அரசு அதிகாரிகளுக்கு தவறான தகவலை அளித்தல்
3(1) (x) - சாதிபெயரை சொல்லி திட்டுதல்
3(1) (xi) - பெண்களை மானபங்கப்படுத்துதல்
3(1) (xiv) - பொது வழிகளை பயன்படுத்த தடை விதித்தல் 
3(1) (xv) - குடியிருப்பிலிருந்து அகற்றுதல்
3(2) (iii) - சொத்துக்களை தீயிட்டு அழித்தல்
3(2) (iv) - குடியிருப்பில் தீவைத்தல்
3(2) (v) - 10  வருடத்திற்கு குறையாத தண்டனை

ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் .

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு :

1 . பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரண சேதங்களை மதிப்பிட்டு அவர்களுக்கு நீண்ட கால நோக்கில் பயன்தரவல்ல நிவாரணமாக அவை அமைய வேண்டும்.
             
2 . தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம்(1989) இன் கீழ் மாவட்ட ஆட்சியரை சிறப்பு அதிகாரியாக நியமித்து சேதங்களை பார்வையிட்டு நிவாரணத்தை மதிப்பிட வேண்டும்.
             
3 . தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்து மீண்டும் குடியமர்த்துவதொடு  அச்சமற்ற முறையில் விசாரணையில் கலந்து கொண்டு சாட்சியம் அளிக்க வகை செய்ய வேண்டும். மேலும் தலித் மக்களை கைது செய்வதற்கு தோதாக வழக்கை பதிவு செய்துவிட்டு காத்திருப்பதையும் காவல் துறை கைவிட வேண்டும்.

தமிழக அரசுக்கு :

1 . அரசு சார்பாக தலித்துகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களையும் முத்தரையர் தரப்பு ஆக்கிரமிதுக்கொண்டதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன . தலித்துகளுக்கு நில உரிமை, அரசு சொத்துக்களில் உரிய பங்களித்தல் { குளம், கோவில் , கிராம சொத்து ஏலம் } .

2.தலித்துகள் தாங்கள் விரும்பும் அரசியல் அடையாளத்தை மேற்கொள்வதற்கான சுதந்திர உரிமையை காப்பாற்றுதல்.

3 . சேதங்களை மதிப்பிடவும் சிக்கலை ஆராய்ந்து நிவாரணம் வழங்கவும் தனியான கமிஷன் ஒன்றை நிறுவ வேண்டும்.

4 . ஊரை விட்டு வெளியேறி அல்லல்படும் தலித் இளைஞர்களை உடனடியாக ஊர் திரும்ப ஏற்பாடு செய்யவும் குற்றம் சாட்டப்பட்ட முத்தரையர்களை தவிர மற்ற முத்தரையர் ஆண்கள் ஊர் திரும்பும் வகையில் காவல் துறை செயல்பட உத்தரவிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கவும், வலியுருத்துகிறோம்.

உண்மை அறியும் குழுவினர்

1 .  பகத்சிங், வழக்குரைஞர்
2 . விஜயபாரதி வழக்குரைஞர்
3 . ஸ்டாலின் ராஜாங்கம், பேராசிரியர்
4 . முரளி, ஆய்வாளர்
5 . கண்ணம்மா, ஆசிரியர்
6 . திவ்யா சட்ட மாணவர்
7. விஜயலட்சுமி, சட்ட மாணவர்
8 . விஜயன், சட்ட மாணவர்
9. கிருஷ்ணா, சட்ட மாணவர்
10. பகவன் தாஸ், சட்ட மாணவர்
11. பெரியசாமி, சட்ட மாணவர்
12. பாண்டியன், சமூக ஆர்வலர்
13. தங்கப்பாண்டியன், சமூக ஆர்வலர்.

குறிப்பு 

பரளிபுதூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2011 ஜூலையில் அரசு சார்பாக வீடு ஒன்றுக்கு 50,000 வழங்கப்பட்டது. இதுபோன்ற நிவாரணம் மட்டுமே நம் நோக்கம் இல்லை. எனினும் இதை நாம் மறுதலிக்க முடியாது. பல்வேறு அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும் இணைந்து ஏற்படுத்திய அழுத்தமே இதற்கு காரணம். குறிப்பாக அப்போது மதுரைக்கும் பரளிபுதூருக்கும் வருகை தந்த தேசிய SC/ST ஆணைய உறுப்பினர் லதா ப்ரியகுமாரின் வருகை முக்கிய பங்களிப்பாக இருந்திருக்கும் என்று நம்பலாம். உண்மை அறியும் குழு என்கிற முறையில் மதுரையிலும் திண்டுக்கலிலும் அறிக்கை அளித்தவர்கள் என்ற முறையிலும் லதா ப்ரியகுமாரை நேரடியாக சந்தித்து நிலைமையை விளக்கியவர்கள் என்ற விதத்திலும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திலிருந்து நிவாரணம் குறித்த தகவல் உண்மையறியும் குழுவாகிய நமக்கு முறையாக தெரிவிக்கவும் பட்டது. அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி. 


Thursday 18 August 2011

ஆதிதிராவிடன்: ‘கற்பனை’யாக்கப்பட்ட இதழ் (உண்மெய்யும் திரிபும்) - இடுகை 2

ஸ்டாலின் ராஜாங்கம்



ஆதிதிராவிடர் என்னும் அடையாளம் அரசியல் தளத்தில் முக்கியத்துவமடைந்த சமகாலத்தில்தான் ஆதிதிராவிடன் என்னும் மாத இதழ் இலங்கையிலிருந்து வெளியானது. 1912ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட தென் இந்திய ஐக்கியச் சங்கத்தின் சார்பில் இவ்விதழ் 1919ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எஸ்.பி. கோபால்சாமி என்பவர் இதன் ஆசிரியராவார். இச்சங்கம் 1922இல் இந்தியன் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களின் ஊழியன் என்று பெயர் மாற்றம் பெற்றது. இரண்டாண்டுகளுக்கும் மேலாக இவ்விதழ் வெளியானதாகத் தெரிகிறது. இரண்டாண்டு முடிவில் முதலாண்டு இதழ்கள் ஒரு தொகுதியாகவும் இரண்டாமாண்டு இதழ்கள் மற்றொரு தொகுதியாகவும் தொகுத்து வெளியிடப்பட்டன.

As the identity called Adi Dravidar became important in the political sphere, at the same time, a monthly magazine called Adi Dravidan was published from Sri Lanka. On behalf of the South Indian Aikiya Sangam – which was begun in Sri Lanka in March, 1912 – this magazine was begun in 1919. S.P. Gopalsami was the editor. The Sangam changed its name in 1922 to Indian Oppressed Peoples’ Servant. It seems that the journal was published for over two years. At the end of two years, the journals of the first year were published as one volume and those of the second as another.

ஆதிதிராவிடர்களின் கல்வி, ஒழுக்கம், கலாச்சாரம், லௌகீக விசயம், ராஜ விசுவாசம் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு தொடங்கப்பட்டதாகச் சொல்லிக்கொண்டாலும், ஆதிதிராவிடர்களுக்கான கல்வியையே முதன்மை நோக்கமாய்க்கொண்டு இயங்கியது. கேசவ பிள்ளை, சிதம்பரம் நந்தனார் பாடசாலை சுவாமி சகஜானந்தர் ஆகியோர் இலங்கை சென்ற காலத்திலேயே இவ்விதழ் உருப்பெற்றது. சமய அடிப்படையில் சைவ சமய உணர்வைப் போற்றிய இதழ் இது.

Though the stated aim was to foster the education, discipline, culture, spiritual guidance and loyalty to the King among Dalits, it functioned with education as its primary aim. This magazine had taken shape in the time when people like Kesava Pillai, Chidambaram Nandanar, Paadasaalai Swami Sagajaanandar had gone to Sri Lanka. With a religious base, this magazine fostered the Shaivite religious sentiment.

தெய்வமிகழேல், சக்கர நெரிநில், ஊக்கமது கைவிடேல் என்னும் வாசகங்களை முகப்பிலே தாங்கி 16 பக்கங்களில் வெளியானது. இதழின் பக்கங்களைக் கூட்டவும் வார இதழாக மாற்றவும் தொடர்ந்து விருப்பத்தை வெளிப்படுத்திய இவ்விதழ் விருப்பம் நிறைவேறாமலேயே நின்றுபோனது. 1000 சந்தாவினை நெருங்கியிருந்த இந்த இதழ் தமிழகம், கோலார் தங்கவயல், பர்மா ஆகிய இடங்களுக்கும் அனுப்பப்பட்டது. தொடர்ந்து நன்கொடை, சந்தா ஆகியவை கிடைத்துவந்தபோதிலும் இதழ் நிலைப்பதற்கு போதுமானவையாக அவை இல்லை. ஆயிரம் பிரதிகளை நெருங்கியிருந்த இவ்விதழ் ஆதிதிராவிடர்களின் அறிவுசார்ந்த வேட்கையினை அடையாளம் காட்டக்கூடியதாக இன்றைக்கு மாறி நிற்கிறது. ஆதிதிராவிடர் அல்லாதாரும் சந்தாதாரர்களாகவும் பங்களிப்பாளர்களாகவும் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதழ் பற்றிய விமர்சனம் சுதேசமித்திரன் இதழிலும் வெளியானது.

With aphorisms such as ‘Do not despise god’, ‘Stand by ethics’, ‘Do not abandon enthusiasm’ on the cover, it was published with 16 pages. Though the wish that pages could be increased and that the journal be made a monthly was expressed frequently, this never happened. This magazine, which had a subscriber base of close to 1000, was sent to places including Tamil Nadu, Kolar Gold Fields and Burma. Though it received continuous donations and subscriptions, these were not sufficient to keep the magazine going. This magazine, that reached a print run of close to 1000, today has become proof of the Adi Dravidar’s intellectual thirst. It is notable that non-Adi Dravidar also participated in this magazine as contributors and subscribers. A review of the magazine also appeared in the Sudesamitran.

பின்னாளில் திராவிடன் இதழின் ஆசிரியராக விளங்கிய கனக சங்கர கண்ணப்பன் சூத்திரர் யார்? ஆதிதிராவிடர்களின் தொழில் போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார். ஆதிதிராவிடர்கள் விவசாயம், நெசவு, போர், இசைத் தொழில், வள்ளுவர் எனப் பல்வேறு தொழில் புரிந்தவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்றெழுதிய அவர் இக்கருத்தினையே எஸ். சோமசுந்தரம்பிள்ளை போன்ற சென்னை வாழ் ஆதிதிராவிடர்களும் கொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டார். ஆதிதிராவிடர்கள் பல்வேறு தொழிலிலும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தனர் என்னும் வரலாற்றுரீதியான நம்பிக்கையினைப் பலரும் கொண்டிருந்தனர் என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது. அதேபோல இவ்விதழில் வெளியான சுவாமி சகஜானந்தரின் உரைகள் மூலம் அவருக்கிருந்த விரிவான தமிழறிவு புலப்படுகிறது. சகஜானந்தரைப் போற்றிய இவ்விதழ் நம் தலைவர் எம்.சி. ராஜா என்று எம்.சி. ராஜாவையும் போற்றத் தவறவில்லை. இத் தலைப்பிலேயே வெளியான கட்டுரையொன்றில் “இம்மஹான் நம் ஆதிதிராவிட குலசிரேஷ்டர், சென்னை, ஆதிதிராவிட மஹாஜன சபைக்கு செக்ரடேரியும் தற்காலம் வந்துலாவும் சென்னை ஆதிதிராவிடன் பத்திரிக்கைக்கு ஆசிரியருமாவார். . . ஆதிதிராவிட மக்களில் சட்ட நிருபண சபைக்கு மெம்பராகத் தெரிந்தெடுப்பது இதுவே முதல் தடவை” (1919 ஆகஸ்ட் 15) என்று புகழ்கிறது. இதே காலத்தில் சென்னையிலிருந்து ஆதிதிராவிடன் என்னும் இதழ் எம்.சி. ராஜாவை ஆசிரியராகக்கொண்டு வெளியானது எனும் குறிப்பும் இக்கட்டுரை மூலம் கிடைக்கிறது.

Who was Kanaga Sankara Kannappan Soothirar, the editor of the Dravidan magazine in later days? He continually wrote essays such as the work of Adi Dravidar. Mentioning that the Adi Dravidar were involved in agriculture, weaving, war, music, fortune telling and other such work, he mentions that Adi Dravidar Chennai residents like Somasundaram Pillai said the same. Through this, we learn that many people believed the Adi Dravidar to have skill in many trades. Similarly, the speeches of Swami Sagajaanandar show the breadth of his knowledge of Tamil. The same magazine that praised Sagajaanandar did not fail to praise M.C. Raja as ‘our leader M.C. Raja’. In an essay that was published under this headline, he is praised as, “This great man of our Adi Dravidar clan is Chennai secretary of the Adi Dravida Mahajana Sabha and is editor of the Chennai Adi Dravidan magazine as well…this is the first time that a member of the Adi Dravida people has been selected to the Legislative Council” (1919, August 15). Through this essay, we learn that a magazine called Adi Dravidan was being published from Chennai with M.C. Raja as the editor.

பெண்கள் முன்னேற்றம் பற்றித் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இவ்விதழில் மறைமலையடிகள் எழுதிய நூல்கள் குறித்த விளம்பரங்கள் விரிவான அறிமுகக் குறிப்புகளுடன் பன்முறை வெளியிடப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் கல்லல் பகுதியில் ஆதிதிராவிடர்கள் படும் சாதிக் கொடுமைகள், இலங்கையில் நடக்கும் சாதிப் பிரச்சினைகள், தென்னிந்திய ஐக்கியச் சங்கத்தின் பணிகள் போன்ற பல செய்திகளும் இடம் பெற்றன.

In this magazine that continuously wrote about the advancement of women, Maraimalai Adigal’s books were advertised several times with extensive introductions. There was also other news about the caste atrocities that were inflicted upon Adi Dravidar in the Kallal region of the Ramanathapuram district, the caste problems in Sri Lanka and the work of the South Indian Aikkiya Sangam.

ஆதிதிராவிடர்களின் கல்வி சார்ந்து இவ்விதழில் பதிவுகள் தனியாக எழுதுமளவுக்கு விரிவாக அமைந்துள்ளன. ஆதிதிராவிடர்கள் கல்வியின் மூலமே சாதிய இழிவை விலக்கிக்கொள்ள முடியும் என்று உறுதிபட எழுதியது. கிறித்தவப் பாதிரிமார்கள்கூடக் கல்வியின் பெயரால் இம்மக்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்னும் கோபத்தை வெளிப்படுத்திய இவ்விதழ் இம் மக்களின் தனித்துவமான நடவடிக்கைகளினாலே இவை சாத்தியமடைய முடியும் என்று சொல்லவும் செய்தது. அதாவது, “இலங்கை தென்னிந்திய ஐக்கியச் சங்கம், தென்னிந்திய ஒடுக்கப்பட்டவர்கள் ஐக்கியச் சங்கம் மற்றும் குலாபிமானிகள் முன்னின்று நடத்தினால் மட்டுமே” கல்வி உள்ளிட்ட சீர்திருத்தங்கள் கைகூடுமென்று எழுதியது.

There are separate essays that find place in this journal on the theme of the education of the Adi Dravidar. It was written firmly that the Adi Dravidar would be able to remove the slights of caste through education alone. The magazine expressed anger against Christian pastors who were ‘using’ these people in the name of education, while acknowledging that the unique practices of the people made this possible. The magazine carried exhortations that only the uniting of the Sri Lanka South India Aikkiya Sangam and the South India Oppressed People’s Aikkiya Sangam and other leaders from the community could lead to reforms in areas including education.

கோயம்புத்தூர் ஆர். வீரையன் போன்றோர் ஆதிதிராவிடர் கல்விக் குறித்துத் தொடர்ந்து எழுதிவந்தனர். அவர் பெயரில் வெளியான அறிக்கை ஒன்று:

People like Coimbatore R. Veeraiyan wrote continuously about Adi Dravidar education. A statement that was issued in his name:

அறிக்கை
நண்பர்கள்!
வீணாக காலங்கழிக்காதீர்கள். கோயம்புத்தூரில் நடைபெற்றுவரும் நக்ஷ்த்ரவாசக சாலை இரவு பள்ளிக்கூடத்தில் இரவு 7 மணியிலிருந்து 9 1/2 மணி வரைக்கும் இலவசமாக வாசித்து முன்னேறுங்கள்.
“முன் கசக்கும் பின் இனிக்கும்”

ஆர். வீரையன்
திருமால் வீதி                                   
கோயம்புத்தூர்

Statement
Friends!
Do not waste time. Go to the Nakshatravaasaga Road Night School that is being run in Coimbatore between 7 and 9.30 at night, read for free and progress.
‘What is bitter to start with, will be sweet later’
Thirumal Street                                    R. Veeraiyan
Coimbatore


என்று வெளியாகியிருந்தது. 1919ஆம் ஆண்டிலேயே சிதம்பரம் நந்தனார் பாடசாலையில் சுமார் 100 மாணவர்கள் படித்தார்கள் என்னும் குறிப்பையும் இதழ் தருகிறது.

is published thus. We learn from this magazine that the Chidambaram Nandanar School has about 100 students in the year 1919 itself.

பிராமணரல்லாதார் அரசியல் தலித் மக்களையும் உள்ளிழுத்துக்கொண்டு திராவிடர் என்னும் ஒற்றை அடையாளத்திற்குள் இணைத்தபோதுதான் தனித்துவத்தின் அடையாளமாக ஆதிதிராவிடன் என்னும் சொல்லாடல் மேலுக்கு வந்தது. எனினும், இந்நடவடிக்கையில் முன்னின்ற எம்.சி. ராஜா நீதிக்கட்சியோடு இணைந்து பணியாற்றியதோடு தன் முயற்சியின் காரணமாக அச்சொல்லுக்கு அரசின் அங்கீகாரத்தையும் பெற்றார். ஆதிதிராவிடன் இதழுங்கூடப் பிராமணரல்லாத அரசியலையும் ராஜாங்கத்தின் கல்விப் பணிகளையும் ஆதரித்து எழுதிவந்தது. டாக்டர். டி.எம். நாயரின் மரணம் பற்றி விரிவான இரங்கல் அறிக்கையும் எழுதப்பட்டது.

It was when the non-Brahmin politics pulled in the Dalit people under the unified identity of Dravidan that the term Adi Dravidan came into use to identify difference. M.C. Raja, who worked with the Justice Party, through his labour, found government recognition for the term. The Adi Dravidan magazine, too, wrote in support of the non-Brahmin politics and Rajangam’s work in education. It published a long condolence message for the death of Dr. T.M. Nair.

ஆனால், 1921ஆம் ஆண்டு சென்னை பின்னி ஆலை வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒட்டியெழுந்த கலவரத்தின் பின்னணியில் ஆதிதிராவிடன் இதழ் நீதிக் கட்சிக்கு எதிராக எழுதியது. இப்போராட்டத்தின் போது, எம்.சி. ராஜா தலித் மக்களை வேலைக்குத் திரும்பும்படி கோரியதால் அம்மக்களும் வேலைக்குத் திரும்பினர். அதனால் இம்மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன. புளியந்தோப்பு கலவரம் என்று சொல்லப்பட்ட இக்கலவரத்தைத்தான் பறையர்களைச் சென்னையைவிட்டே அப்புறப்படுத்த வேண்டுமென எழுதப்பட்ட சர்.பி.டி. தியாகராயரின் அறிக்கையைத் திராவிடன் இதழ் வெளியிட்டது. நீதிக்கட்சியும் திராவிடன் இதழும் தலித்துகளுக்கு எதிராக நேரடியாகப் பேசின. இவ்விடத்தில் எம்.சி. ராஜா நீதிக்கட்சியிடமிருந்து விலகி நின்றார். இன்றைக்கும் சென்னை பின்னி மில் கலவரம், நீதிக்கட்சியின் தலித் எதிர்ப்பு ஆகிய அனைத்திற்கும் கிடைக்கும் தகுதி வாய்ந்த தலித் தரப்பு ஆதாரம் இவ்விதழ்தான்.

Yet in 1921, during the violence that followed the strike at the Binny Mill, the Adi Dravidan magazine wrote against the Justice Party. During this struggle, M.C. Raja requested the Dalit people to return to work and they did so. They were severely attacked in consequence. Houses were burnt. The Adi Dravidan magazine published a statement from Sir P.T. Thiagarayar saying that the Paraiyar should be removed from Chennai, during these riots that are termed the Pulianthope riots. The Justice Party and the Dravidan journal spoke openly against Dalits. At this point, M.C. Raja stood apart from the Justice Party. Till date, the only authoritative Dalit recording of the Chennai Binny Mill violence and the Justice Party’s opposition to Dalits is this journal alone.

நீதிக்கட்சியும் திராவிடன் போன்ற பத்திரிகையும் ஆதரவாயிருப்பார்கள் என்று நம்பிய ஆதிதிராவிடன் இதழ் சாதிஇந்துக்களும் கைவிட்டுவிட்டனர் என்று வருந்தி எழுதியது. திராவிடன் போன்ற இதழின் ஆதிதிராவிடர் விரோதப் போக்கைத் தொடர்ந்துதான் ‘ஆதிதிராவிடர்களுக்கு தினசரியோ வார இதழோ நடத்த வேண்டும் அல்லது ஆதிதிராவிடனையாவது வார இதழாக மாற்றிட’ வேண்டுகோள் விடுத்தது இவ்விதழ். அதோடு இலங்கையில் கூடியளவு நல்ல நிலைமையிலிருக்கும் இந்தியரும் ஆதிதிராவிடர்களும் இயன்ற அளவு தொகை அனுப்பும்படியும் உதவிசெய்பவர் பெயர் ஆதிதிராவிடனில் பிரசுரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோலச் செய்யவும்பட்டது.

The Adi Dravidan journal that had once believed that the Justice Party and the Dravidan journal would support them, expressed grief that the caste Hindus had abandoned them. It is an expression of the hostility towards the Adi Dravidan journal that the Dravidan journal asked that ‘the Adi Dravidar should have a daily or a weekly or the Adi Dravidan should be made a weekly’. Immediately, it was announced that the names of those who contribute for this – either well-to-do Indians in Sri Lanka or other Adi Dravidar – would be published in the pages of the Adi Dravidan magazine. This was done.

ஆதிதிராவிடர் நலனில் அர்ப்பணிப்புள்ள இந்த இதழை நீதிக்கட்சியை அம்பலப்படுத்தியது என்ற காரணத்தினாலேயே ‘கற்பனையான பத்திரிக்கை’ என்று சொல்லிவிடவும் இங்கு முயற்சிக்கப்பட்டது. எஸ்.வி. ராஜதுரையும் வ. கீதாவும் இணைந்து எழுதிய பெரியார்: சுயமரியாதை சமதர்மம் என்னும் நூலில் “நீதிக்கட்சி பத்திரிக்கையான திராவிடன் இழிவுக் குறிப்போடு எழுதியதாகச் சிலர் கூறுவதும் அதன் பொருட்டுக் கற்பனையான சில பத்திரிகையொன்றை ஆதாரம் காட்டுவதும் அடிப்படையில்லாதவை”(பக். 381) என்று குறிப்பிடுவது ஆதிதிராவிடன் இதழைத்தான். அதேபோல 1940களில் ‘திராவிடஸ்தான் போல எங்களுக்கும் ஆதிதிராவிடஸ்தான் வேண்டும்’ என்று முனுசாமிப்பிள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டபோது, அதற்கு மறுப்பாக “திராவிடர், திராவிடம் என்பவை சரித்திரச் சான்றுகளைக் கொண்ட சொற்கள், ஆதிதிராவிடன் என்ற சொல்லுக்கு சரித்திர ஆதாரமில்லை” என்று விடுதலை தலையங்கம் சொன்னது. திராவிடம் என்னும் கருத்தாக்கத்தை உறுதிபடக் கட்டியெழுப்பிய கால்டுவெல்லின் விளக்கமே இந்த மண்ணின் பூர்வகுடிகள் ஒடுக்கப்பட்டவர்களே என்பதுதான்.

Since this magazine that had given itself to the service of the Adi Dravidar had ripped the mask off the Justice Party, there was an effort to brand this magazine as ‘imaginary’. S.V. Rajadurai and V. Geetha in their jointly-written Periyar: Suyamariyathai Samatharmam, refer to the Adi Dravidan magazine when they say ‘Some say baselessly that the journal of the Justice Party, the Dravidan, had used derogatory words and quote imaginary magazines as proof’. Similarly, in the 1940s, when Munusamipillai issued a statement that ‘We need Adi Dravidastan, just like Dravidastan’, the Viduthalai journal published an editorial that ‘Dravidar and Dravidian were words with historic proof, whereas Adi Dravidan did not have any historic standing’. It was to prove that the marginalised people of this country were its indigenous inhabitants that Caldwell built up the Dravidan ideology.

தலித்துகள் தங்கள் கருத்துக்கு ஆதரவாக இருக்கும்வரை அவர்களை ஆதரவாளர்களாகச் சொல்லுவதும் தனித்துவமாக எழுதவோ செயற்படவோ முனையும்போது, அவர்களின் இருப்பையே காலிசெய்யும் நிலைமைக்குத் துணிந்ததையுமே இப்போக்குகள் சுட்டுகின்றன.

As long as Dalits are supportive of their ideas, they were called supporters. The tendency to negate their very existence, when they sought to write or act separately, is visible here.

தொடக்ககால ஆதிதிராவிட முன்னோடிகள் பௌத்தம், வைணவம், சைவம் என்று வெவ்வேறு ஆன்மீக நோக்கங்களில் ஆர்வம் கொண்டிருந்தாலும் ஆதிதிராவிடர்களுக்கான நலன் எனும் பயணத்தில் ஒன்றுபட்டிருப்பதைக் காணமுடிகிறது. வித்வான் க்ஷி.கி. முனிசாமி பிள்ளை எழுதிய தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் புராணம் என்னும் நூல் வள்ளுவர் ஆதிதிராவிடரே என்பதை நிறுவவந்த நூலாகும் என்று ஆதிதிராவிடன் (1919 ஜூன் 15) கூறுகின்றது. 26.04.1920 சுதேசமித்திரனில் ஸ்ரீமான் கோ. குப்புசாமி என்பவர் வள்ளுவர் பஞ்சமரா? என்று சகஜானந்தரை நோக்கிக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பெருமாள் நாயனார் என்பவர் வள்ளுவர் பஞ்சமரே பறையரே என்று ஆதிதிராவிடனில்தான் (1920 ஜூன் 15) எழுதினார். வள்ளுவர் தொடர்பான இத்தகு விவாதம் இருபதாம் நூற்றாண்டில் பரவலாக நடந்ததாகவும் அதில் ஆதிதிராவிட அறிவாளிகள் பலரும் வள்ளுவர் பஞ்சமரே என்று நிறுவுவதில் ஒன்றுபட்டிருந்தனர் என்றும் தெரிகிறது. அயோத்திதாசப் பண்டிதரும் இத்தகு விளக்கத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

While the Adi Dravida leaders had various spiritual leanings including Buddhism, Vaishnavism and Shaivism in the early years, we can see that they were united in the journey towards the well-being of Adi Dravidar. Vidwan K.K. Munisami Pillai’s Theivappulamai Thiruvalluva Naayanaar Puranam tried to establish that Valluvar was an Adi Dravidar, according to the Adi Dravidan (1919 June 15) magazine. In Sudesamitran, issue dated 26.04.1920, Sriman K. Kuppusamy asks Sagajaanandar if Valluvar is a Panjamar. In reply to this, Perumal Nayanar writes in Adi Dravidan (1920 June 15) that Valluvar was indeed Panjamar and Paraiyar. Though this debate around Valluvar has been widespread through the 20th century, it is clear here that Dalit intellectuals were united in proving that Valluvar was truly a Panjamar. It is notable that Iyothee Thass was also involved in such explanations.

பயன்பட்ட ஆதாரங்கள்:
1. ராஜதுரை, எஸ்.வி., கீதா, வ. – பெரியார்: சுயமரியாதை – சமதர்மம். மே, 1999, விடியல் பதிப்பகம், கோவை.
2. ராஜதுரை, எஸ்.வி. – பெரியார் – ஆகஸ்ட் 15. பிப்ரவரி 1998, விடியல் பதிப்பகம், கோவை.

இதழ்கள்:
1. ஆதிதிராவிடன் (இரண்டு ஆண்டு இதழ் தொகுப்பு): மதுரை தலித் ஆதார மையம்.
2. தலித் – 2004 (ஜூலை-ஆகஸ்ட்) – ஆ.இரா. வேங்கடாசலபதியின் கட்டுரை.

References:
1. Rajadurai, S.V., Geetha, V. – Periyar: Suyamariyaathai – Samatharmam, May 1999, Vidiyal Pathippagam, Coimbatore
2. Rajadurai, S.V. – Periyar – August 15. February 1998, Vidiyal Pathippagam, Coimbatore
Journals
1. Adi Dravidan (Collected volume): Madurai Dalit Support Centre
2. Dalit – 2004 (July-August) – A. R. Venkatachalapathy’s essay


Adi Dravidan : The magazine that was made ‘imaginary’ (The truth and the falsification)
Stalin Rajangam
Read the first half of this essay in translation here

ஆதிதிராவிடன்: ‘கற்பனை’யாக்கப்பட்ட இதழ் (உண்மெய்யும் திரிபும் - இடுகை 2)

ஸ்டாலின் ராஜாங்கம்


தீண்டப்படாதோரின் இதழியல் பயணம் நாமறிந்து 19ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே தொடங்கிவிட்டது. அன்று தொடங்கி இன்று வரையிலும் பல்வேறு அரசியல் கருத்துகளையும் மாற்றங்களையும் வெளிப்படுத்துபவையாக அவை வெளியாகி வருகின்றன. அவற்றிடமிருந்து பிறந்த கருத்துகள் பல இன்று சிறந்த அரசியல் ஜனநாயகக் கருத்துகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அவை தலித்துகளிடமிருந்து பிறந்தவை என்னும் உண்மை மட்டும் சொல்லப்படுவதில்லை. இந்நிலையில் கடந்தகால இதழ்களின் வரலாற்றைச் சொல்லுவதை இழந்துபோன அறிவடையாளத்தை மீள்கண்டுபிடிப்புச் செய்யும் சமூகச் செயல்பாடாகவே புரிந்துகொள்ள வேண்டும். தீண்டப்படாதோர் வெளியிட்ட இதழ்களில் சில: சூரியோதயம் (1869), பஞ்சமர் (1871), ஜான் ரத்தினம் நடத்திய திராவிட பாண்டியன் (1885), வேலூர் முனிசாமி பண்டிதரின் ஆன்றோர் மித்திரன் (1886), டி.ஐ. சுவாமிக்கண்ணுப் புலவரின் மகாவிகட தூதன், இரட்டைமலை சீனிவாசன் நடத்திய பறையன் (1893), இல்லற ஒழுக்கம் (1898), தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரப் புலவரின் பூலோக வியாசன் (1900), அயோத்திதாசப் பண்டிதரின் தமிழன் (1907), சொப்பனேஸ்வரி அம்மாள் நடத்திய தமிழ்மாது (1907), மற்றும் ஆதிதிராவிடமித்திரன் போன்ற இதழ்கள் தொடக்கக் காலத்தவையாகும்.

The journalistic journey of the untouchable community begins, to our knowledge, in the middle of the 19th century. These journals have been published to express many political thoughts and changes from that period till date. Many ideas that emerged from them have been accepted today as exceptionally democratic political concepts. Yet, the truth that they were born from dalits is, alone, not acknowledged. In such a condition, the act of telling the history of these journals of the past has to be understood as a social act that is recovering a lost intellectual identity. Some of the journals published by the untouchable communities include : Suryodayam [Sun Rise] (1869), Panjamar (1871), Dravida Pandian (1885) that was run by John Rathinam, Vellore Munisami Pandithar’s Aandror Mithran (1886), D.I. Swamikannu Pulavar’s Mahavikada Thoothan, Rettaimalai Seenivasan’s Paraiyan (1893), Illara Ozhukkam [Domestic Order] (1898), Dasavadanam Poonjolai Muthuveera Pulavar’s Poologal Viyaasan (1900), Iyothee Thass Pandithar’s Thamizhan (1907), Soppanesvari Ammal’s Tamizh Maathu (1907) and Adi Dravida Mithran were among the journals that belonged to the initial period.

அயோத்திதாசரின் தமிழன் இதழை அவரது மறைவிற்குப் பின் அவருடைய மகன் க.அ. பட்டாபிராமன் 05.05.1914 முதல் 18.08.1915 வரை நடத்தினார். பின்னர் ஜீ. அப்பாத்துரையாரும் பி.எம். ராஜரத்தினமும் சேர்ந்து கோலார் தங்கவயலிலிருந்து 09.07.1926 முதல் 27.06.1934 வரை மீண்டும் தமிழன் இதழைக் கொணர்ந்தனர். அயோத்திதாசர் காலத் தமிழன் இதழுக்கும் பிந்தையோர் நடத்திய தமிழன் இதழுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதற்கான சமூக அரசியல் பின்புலங்கள் தனியே ஆராயத்தக்கன. மேற்கண்ட இதழ்களில் தமிழன் தவிர வேறெந்த இதழும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது மாபெரும் இழப்பாகும். 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நடத்தப்பட்ட இதழ்களின் கதியும் அதுதான். அத்தகைய இழப்பு இப்போது அரசியல்ரீதியான இழப்பாகவும் மாறி நிற்கிறது. இதனால் தலித் அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த கடந்தகாலப் போராட்டங்கள், வெற்றிகள், இழப்புகள், ஏமாற்றங்கள் என யாவும் மங்கலாகவே தெரிகின்றன. எனினும் தலித்துகளின் நீண்ட கால அரசியல் தொடர்ச்சியினைக் கண்டெடுக்கக் கடந்த காலத்தின் மீதான வரலாற்றுரீதியான பயணமும் தேவைப்படுகின்றது.

Iyothee Thass’ Thamizhan journal continued to be published after his death by his son K. A. Pattabiraman from 05.05.1914 to 18.08.1915. Afterwards, G. Appadurai and B.M. Rajarathinam together brought out the Thamizhan journal again, jointly publishing it from Kolar Gold Fields between 09.07.1926 and 27.06.1934. There are many differences between the Thamizhan journal that Iyothee Thass published and the journal that others published after him. The social circumstances that were responsible for this require separate research. Of the journals listed above, except Thamizhan, it is a great loss that we have not recovered even one journal fully. Journals that were published till the middle of the 20th century have suffered the same fate. Such a loss has also become a political loss now. Undertaking a historical journey into the past to find out the long, unbroken political movement of dalits is an imperative.

நாமக்கல் பகுதியிலிருந்து வெளியான சமத்துவம் (1945), வேலூர் பகுதியிலிருந்து நடத்தப்பட்ட பள்ளிக்கொண்டா கிருஷ்ணசாமியின் சமத்துவச் சங்கு, 1942இல் ஆம்பூர் ஈ.சுப்பிரமணியத்தால் மாதம் இரு முறையாகத் தொடங்கப்பட்ட தென்னாடு, 1941 முதல் வார இதழாகவும் 1946 முதல் மாதமிருமுறை இதழாகவும் வெளியான ஜே.ஜே. தாஸ், மூர்த்தி ஆகியோர் இணைந்து நடத்திய உதயசூரியன், 1930களில் க.அ. பட்டாபிராமதாஸால் நடத்தப்பட்ட ஆங்கில-தமிழ் மாத இதழான தர்மதொனி போன்ற இதழ்கள் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெளியாயின. அதற்கும் சற்றே பின்னால் நடத்தப்பட்ட அன்பு பொன்னோவியத்தின் அறவுரை, மக்கள் அறம், டி. குப்புசாமியின் பௌர்ணமி, சென்னை நீலக்கொடி, வீராசாமியின் தொண்டு, ரத்தினம் நடத்திய எரிமலை, ரத்தினமும் எக்ஸ்ரே மாணிக்கமும் இணைந்து நடத்திய சிவில் உரிமை, டாக்டர் அ. சேப்பன், சக்திதாசன் ஆகியோர் இணைந்து நடத்திய உணர்வு, மேலும் அம்பேத்கரிஸ்டு, அறிவுவழி ஆகிய இதழ்கள் இங்குக் குறிப்பிடத்தக்கவை. இத்தகைய நெடிய மரபில் இருபதாம் நூற்றாண்டின் கால்பகுதியிலேயே வெளியான இதழ்களிலொன்றுதான் ஆதிதிராவிடன் என்னும் இதழ்.

Samththuvam [Equality] (1945) that was published from the Namakkal region, Pallikonda Krishnaswami’s Samaththuva Sangu that was published from the Vellore region, Ambur E. Subramaniam’s Thennadu [Southern Country] that was published bi-monthly in 1942, J.J. Thass that was published from 1941 as a weekly and from 1946 as a bi-monthly, UdhayaSooriyan [Rising Sun] that was published by people including Moorthy, the English-Tamil monthly Tharmathoni that was published from the 1930s by K.A. Pattabiramathass and similar journals were among those that were published towards the middle of the 20th century. Magazines that were published slightly later such as Anbu Ponnoviyam’s Arivurai [Advice], Makkal Aram [People's Ethics], D. Kuppusami’s Pournami [Full Moon/Poornima], Chennai Neelakodi, Veerasami’s Thondu [Service], Rathinam’s Erimalai [Volcano], Civil Urimai [Civil Right] that was jointly published by Rathinam and X-ray Manickam, Unarvu [Feeling] that was jointly published by Dr. A. Seppan, Sakthithaasan and others, Ambedkarist, Arivu Vazhi [The Path of Knowledge], are among the note-worthy journals. In this long tradition, Adi Dravidan is among the journals to have been published in the first quarter of the 20th century.
***

சமூகத்தளத்திலும் அரசியல்தளத்திலும் திராவிடம், திராவிடர் என்னும் சொல்லைக் கையாண்டு முதலில் அமைப்புகளையும் கருத்தியலையும் உருவாக்கியவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரே ஆவர். திராவிடம் என்பதை மொழி, இனம் என்னும் தளத்தைக் கடந்து சாதிபேதமற்ற சமூகம் என்னும் நிலையில் பொருள்படுத்தியவர்கள் இவர்களே. எனினும், எண்ணிக்கை பலங்கொண்ட பெரும்பான்மை இந்து சாதியினர் அச்சொல்லையே தங்களின் அடையாளமாக மாற்றிக்கொண்ட வேளையில், சிறுபான்மை தலித் சாதி அறிவாளிகளும் அரசியல் செயல்பாட்டாளர்களும் ஆதிதிராவிடர்கள் என்னும் கூடுதலான அரசியல் அடையாளமுள்ள பெயரின் மூலம் தங்களை வெளிப்படுத்திக்கொண்டனர். அயோத்திதாசர் காலத்திலும் அதிகம் புழக்கமில்லாத இச்சொல் அவர் மறைந்த காலத்திற்குப் பின்பே அழுத்தம் பெற்று மேலெழுந்தது. 1910களின் மத்தியில் பிராமணரல்லாதார் இயக்கம் உருபெற்றதன் பின்னணியில் இச்சொல்லிற்கான தேவை கூடுதலாகியது. 1920களில் தமிழக தலித் அரசியலில் கோலோச்சிய எம்.சி. ராஜா, இரட்டைமலை சீனிவாசன் போன்ற செயற்பாட்டாளர்களின் காலத்தில் இச்சொல் நிலைபெற்றது. இப்பெயரில் அமைப்புகளையும் இதழ்களையும் அரசியல் விண்ணப்பங்களையும் இம்மக்கள் வெளிப்படுத்தினர்.

In the social and political spheres, the organisations and ideologies that first used the words Dravidianism and Dravidian were from the marginalised communities. Beyond the realm of Dravidian as relating purely to language and race, they identified the word to mean a society free of caste. At the time when the majority caste-Hindus adopted that word to mean their identity, the minority Dalit intellectuals and political activists took on the additional political identity of Adi Dravidan to express themselves. This word, that was not much in use in Iyothee Thass’ time, received emphasis and rose in importance after his death. In the middle of the 1910s, in the context of the emergence of the non-Brahmin movement, the need for this word increased. In the 1920s, in the time of people like M.C. Raja and Rettaimala Seenivasan who left their mark upon Dalit politics, this word was established. The people began to establish organisations and magazines and publish political petitions using this word.

கோபால் செட்டியாரின் ஆதிதிராவிடர் வரலாறு (1920), திரிசிரபுரம் ஆ. பெருமாள்பிள்ளையின் ஆதிதிராவிடர் வரலாறு (1922) போன்ற வரலாற்று நூல்கள் வெளியானது இக்காலத்தில்தாம். ஆ. பெருமாள்பிள்ளை ஆதிதிராவிடர் வரலாறு எழுதக் காரணமாக இருந்த எம்.சி. ராஜா சென்னை மாகாணச் சட்டப் பேரவையில் 1922இல் ஆதிதிராவிடர் என்னும் சொல்லினை அரசுப் பதிவாக்கக் கோரிக் கொணர்ந்த தீர்மானம் ஏற்கப்பட்டது. ஆதிதிராவிடர் என்னும் சொல்லைத் தலித் சாதிகள் பலவற்றையும் குறிப்பதாக இத்தலைவர்கள் மாற்றவும் செய்தனர். 1938ஆம் ஆண்டு ஆலயப் பிரவேசம் என்னும் சிறுபிரசுரத்தை வெளியிட்ட இரட்டைமலை சீனிவாசன் அந்நூலில் செடூல் காஸ்ட்கள் என்னும் 86 வகுப்புகளையும் சேர்த்தே ஆதிதிராவிடர் என்னும் சொல்லால் குறிக்கிறார்.

Historical books such as Gopal Chettiar’s Athithraavidar Varalaaru [Adi Dravida History] (1920), Thirisirapuram A. Perumalpillai’s Athithraavidar Varalaaru [Adi Dravida History] (1922) were published in this time. M.C. Raja – who was the reason for A. Perumalpillai to write an Adi Dravida history – successfully brought in the resolution seeking for the government to register the word Adi Dravida in the Madras Presidency Legislature in 1922. The word Adi Dravida was changed to refer to the many Dalit castes by these leaders. In 1938, Rettaimalai Seenivasan published a small tract on temple entry and refers to the 86 classes of Scheduled Castes jointly with the word Adi Dravidar.


(Adi Dravidan : The magazine that was made ‘imaginary’ (The truth and the falsification) / Stalin Rajangam Essay published in Kalachuvadu, Issue 93)